இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியலும் சித்திரையும்

படம்
சித்திரையே தமிழர் புத்தாண்டு - பாகம் 03 இந்தப் பாகத்தில் வருவது சற்று ஆழமான அறிவியல் விடயங்கள். தமிழ் நடைக்கேற்ப வழங்கியுள்ளதால் சிலருக்குக் கடினமாக இருக்கலாம்.   ஒன்றுக்கு இரண்டு தடவை படியுங்கள் , இலகுவாகப் புரிந்துவிடும்.

வருடம் - ஆண்டு; இவற்றைப் பயன்படுத்தாதீர்!!!

படம்
சித்திரையே தமிழர் புத்தாண்டு - பாகம் 02 பண்டிகை என்பதே மகிழ்ச்சிக்காக உருவானது தான்! ஆனால், அதன் நோக்கமே சிதைந்து, இன்று தனிநபர் தாக்குதல் நிகழ்த்தும் – வசவுகளை சர்வசாதாரமாகப் பயன்படுத்தி மற்றவர்களை நோகடிக்கும் நாட்களாக அவை மாறியிருக்கின்றன. எல்லாம் இந்த பாழாய்ப்போன சமூக வலைத்தளங்களும், இணையங்களும் செய்த வேலை!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)

படம்
தமிழரின் புத்தாண்டு எது என்ற சர்ச்சை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பன்னெடுங்காலமாக தமிழர், சித்திரை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

சைவத் திருக்கோயில்களும் இறையியலும்

படம்
ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம் . கோவான இறைவன் குடியிருக்கும் இல்லம் கோயில். இத்தகைய ஆலயங்கள் வெறுமனே இறைவழிபாட்டுக்கு மட்டும் கடப்பட்டவை அல்ல. மன்னர்கால செப்பேடுகள், சாசனங்கள், வேறு ஆதாரங்கள் என்பன மூலம், ஆலயங்கள், ஆடல், பாடல், ஓவியம் முதலிய கலைகளை வளர்த்த இடங்களாகவும், வேதம், கல்வி பயிற்றுவிக்கப்பட்ட இடங்களாகவும், ஆதரவற்றோர்க்கு அடைக்கல இடங்களாகவும், மருத்துவமனைகளாகவும், அவ்வளவு ஏன், " கலவி"யைக் கற்பிக ்கும் இடங்களாகக் கூட விளங்கியமையை அறிகிறோம்.

புலையனாக வந்த பரமன்

படம்
ஒரு சின்னக் கதை....!   அந்த அரசிக்கு ஒன்றும் புரியவில்லை! தான் கட்டிய ஆலயத்தின் குடமுழுக்கு நாளும் வந்தாயிற்று, எல்லா ஏற்பாடுகளும் கூட பூர்த்தியாயிற்று! ஆனால், இந்த ஆடல்வல்லான் திருவுருவச்சிலை மட்டும் இன்னும் சரியாகவில்லை! சிற்பியும் செய்து செய்து களைத்துவிட்டான்.. ஏதாவது குறை வந்துகொண்டேயிருக்கிறதே!