இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீபாவளி - ஒரு அலசல்

படம்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வழக்கம் போலவே ஆரியப்பண்டிகை, நரகாசுரன் தமிழன், அவனைக் கொன்ற ஐயர் ஆத்து மாமி சத்தியபாமா, வடை சுடு ஆனால் வெடி சுடாதே போன்ற வாதங்கள் சமவலைத்தளங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. முழு இந்தியத் தீபகற்பமுமே கொண்டாடும் தீபாவளி, உண்மையிலேயே தமிழர் மத்தியில் திணிக்கப்பட்ட விழாவா? அது ஆரியப்பண்டிகையா?

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

படம்
ஒருவர் பேரறிஞராக இருக்கலாம், நம் பெருமதிப்புக்குரியவராக இருக்கலாம். அதற்காக, அவர் என்ன சொன்னாலும் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? சில முரண்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்டக் கூட முயல்வோம், இல்லையா? அப்படி, என் பெருமதிப்புக்குரிய ஒருவரை, ஒரேயொரு கருத்தில் மட்டும் நான் மறுக்க நேரிட்டதுண்டு, அவர் ஆறுமுக நாவலர்! அப்படி அவர் சொன்னது: “சமண சமயத்துச் செட்டிச்சி விக்கிரகத்தின் இருபக்கத்தும் விநாயகக்கடவுள் விக்கிரகமுஞ் சுப்பிரமணியக் கடவுள் விக்கிரகமும் அஞ்சாது வைத்துப் பூசை உற்சவமுதலியன செய்கிற அதிபாதகர்களுஞ் சைவசமய குருமாரோ!”           - யாழ்ப்பாணச் சமயநிலை, 1872, பக்.உ௬ "செட்டிச்சியும் புறச்சமயத்தவளுமாகிய கண்ணகி பரம்பொருள் எனவும், விநாயகக்கடவுள் சுப்பிரமணியக் கடவுள் இருவரும் அவளிற்றாழ்ந்தவர் எனவும் மயங்கி ----- வழிபடும் அதிபாதகர்களும் சைவசமய நிந்தகர்கள் "   - நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகை,1875)                                                 நாவலரால் வட இலங்கையில் சைவ மறுமலர்ச்சி முன்னெடுக்கப்பட்டபோது, குடாநாட்டின் பெருமளவு கண்ணகி ஆலயங்கள், புவ

ஹோட்டன் சமவெளியும் கோவலன் சம்சாரமும்!

படம்
தம்பிலுவில் கண்ணகி எங்கள் ஊர்ப்பக்கம், இப்போ கண்ணகியின் நாட்கள்… ஆண்டாண்டாய் மூடியுள்ள ஆலயங்களெல்லாம் “கதவுதிறந்து” அரிவையர் குரவை ஒலிக்க அவள் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள். “பாணக்கமு”ம் “புக்கை”யும் போதாதென்று, முகநூலில் என் முப்பாட்டிக்கு ஒரு படையல், இந்தப் பதிவு!

மேதியவுணன்கொல்பாவை வாழ்த்து - தமிழ் மகிடாசுரமர்த்தினி தோத்திரம்!

படம்
"அயிகிரி நந்தினி நந்திதமேதினி" என்று ஆரம்பிக்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை அறியாதவர்கள் நம்மில் யாரும் இருக்கமுடியாது!   கொலுவுக்கு அடுத்தபடியாக, நவராத்திரி என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது, மகிடாசுரனும், இந்த மகிடாசுரமர்த்தினி தோத்திரமும்தான்! அதற்குள்ள இயல்பான கவர்ச்சியும், பாடும்போதெழும் உணர்ச்சிப்பெருக்கும், ஏனைய இறைதுதிகளை விட, அதற்கு மட்டும் தனித்துவத்தை ஏற்படுத்திவைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. இத்துதியானது, “இராமகிருஷ்ண கவி” பாடியது என்றும், ஆதிசங்கரர் பாடியது என்றும் இருவேறு கருத்துள்ளது.

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

படம்
(கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் ஆண்டிதழான இளந்தென்றலின் 2016ஆம் ஆண்டுக்கான மலரில் வெளியான கட்டுரையின் சுருக்கம்) தலைப்பைப் படித்த பின்னும், கட்டுரையின் நீளத்தைப் பார்த்து சலித்து, கொட்டாவி விட்டு, வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடாமல், இந்த முதல் வரியைப் படிக்கிறீர்களென்றால்… நன்றி. நம்புகிறேன், வழக்கமான “மெல்லத் தமிழ் இனி!” என்ற அமங்கலச் சொற்றொடருக்கு முடிவுகட்டும் தலைமுறை இதோ, கைகோர்க்கிறதென்று…