இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 02)

படம்
போன தடவை தீபாவளி பற்றிப் பார்த்த உங்களுக்கு, அதற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் ஒரு விழா புகழ்பெற்று விளங்கியிருந்தது என்றும், தற்போதும் அது கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லியிருந்தோம். சித்திரைப்புத்தாண்டு, தைப்பொங்கல் பற்றிய குறிப்புகள் கூட திருத்தமாகச் சொல்லப்படாத சங்க இலக்கியங்களில், இந்த விழா சொல்லப்பட்டிருக்கின்றது என்பதும், தமிழர் மத்தியில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரேயொரு விழா இது மட்டுமே என்றும் சொன்னால், அது பெருமையாகத் தான் இருக்கும். அது வேறொன்றுமில்லை. அந்தத் தமிழரின் திருநாளை நீங்களும் கூடிய விரைவில் கொண்டாடத் தான் போகிறீர்கள். ஆம். அடுத்த கிழமை வரப்போகின்ற கார்த்திகை விளக்கீடே தான். கார்த்திகை மாதத்தில் பூரணை வருகின்ற நாள், அல்லது அதற்கு முன் பின்னான நாள், கார்த்திகை நட்சத்திரமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் இந்த மாதத்துக்கே கார்த்திகை என்று பெயர். இந்தக் கார்த்திகை கார்த்திகையில் தான் விளக்கேற்றி வழிபாடுகளை நிகழ்த்துகிறோம். வீட்டுச்சுவர், மதில், திண்ணை என்பவற்றில் அகல் விளக்கேற்றியும், வீட்டு வாசல்கள், ஆலய முன்றல்களில் சொக்கப்பனை எரித்தும், வீட்டு வள

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)

படம்
தீபாவளி கொண்டாடி முடிந்த கையோடு உங்களுக்கெல்லாம் ஒரு செய்தி சொல்லவேண்டும். தமிழுலகைப் பொறுத்தவரை முக்கியமான பண்டிகைகள் மூன்று. சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி மற்றும் தைப்பொங்கல். இதைச் சொல்லத்தானா இந்தக் கட்டுரை எழுதினாய் என்று சலித்துக்கொள்கிறீர்களென்றால், அது தான் இல்லை. நம் தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தவரை இந்த மூன்று பருவ காலங்களிலுமே மறந்தும் கூட இணையப்பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது. போனாலும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வந்துவிட வேண்டும். சித்திரை வருடப்பிறப்பின் போது, யாரோ ஒரு பகுத்தறிவுவாதி, அது ஆரியப்புத்தாண்டு. கொண்டாடும் நீங்களெல்லாம் ஆரிய அடிவருடிகள் என்று சபித்துக் கொட்டிக்கொண்டிருப்பார். தீபாவளி வந்தால், யாராவது முற்போக்குவாதி ஒருவர் ஆரியப்பண்டிகையைக் கொண்டாடும் முட்டாள்களே, வீணாக பட்டாசு கொளுத்தி சூழலை மாசுபடுத்தாதீர்கள்; என்று முழங்கிக் கொண்டிருப்பார். தைப்பொங்கல் வந்தாலோ, இன்னொரு மேதாவி வந்து பொங்கல் பொங்குவோரின் அகப்பையைப் பறித்து எறிந்துவிட்டு, "அதையெல்லாம் பிறகு பார்க்கலாம். இன்று தான் தமிழ்ப்புத்தாண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், இதைப் பிடியுங்

மட்டக்களப்பின் மலபார்கள்

படம்
மட்டக்களப்பு கோட்டை -  1721 இடச்சு  ஓவியம் ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ் மட்டக்களப்பு மலபார்கள் அதாவது தமிழர்கள் பற்றி சொல்வதை இந்த வாரம் பார்க்கலாம். பழக்கவழக்கம், சமயம்,  தோற்றம், ஏனைய இயல்புகள், அனைத்திலும் மட்டக்களப்பின் மக்கள், யாழ்ப்பாணப்பட்டினம் – கொட்டியாரம் – மங்குல்  கோரளையின் வடபகுதி உள்ளிட்ட, இங்கிருந்து மேற்கே கல்பிட்டி வரையான பகுதி உள்ளடங்கலாக வாழும் மலபார் மக்களை  ஒத்தவர்கள். இப்போதும் மலபார் மொழி பேசும் இவர்கள், மிகப்பழங்காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருவதுடன், தங்களுக்குரிய  உட்பிரிவுகளாகப் பிரிந்துள்ளதுடன், சிங்களவர்களுடனோ வேடர்களுடனோ தங்கள் உட்பிரிவு தவிர்ந்த ஏனையோருடனோ கலந்து  வாழ்வதில்லை. ஏனையவர்களும் இவர்களுடன் கலக்க விரும்புவதில்லை. யாழ்ப்பாணப்பட்டினம், கொட்டியாரம் முதலான ஏனைய  பகுதி மக்கள் போலவே மட்டக்களப்பு மலபார்களும் சிங்களவர்களிலிருந்து தனிப்பட்டவர்களாக, ஓரளவு சுதந்திரமானவர்களாகவும்  இருக்கிறார்கள். கண்டி மன்னனின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக மட்டுமே இவர்கள் நமது கம்பனியுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த அழகான, செழுமையான பூமி

வீரம் விளைஞ்ச மண்ணுரா இது!

படம்
போர்வீரன் ஒருவனும் பெண்ணொருத்தியும், மட்டக்களப்பு 1670 பிரெஞ்சு ஓவியம் “ஸ்ரைல்டா கெத்துடா மாஸ்டா” என்று நம்மை நாமே சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை இருக்கலாம், தமிழகத்தின் ஆன்மிக அரசியல்வாதியார் போல! அதையே இன்னொருவன் வந்து “அண்ணே நீங்க ஸ்ரைல்ணே கெத்துண்ணே மாஸ்ணே” என்று தமிழ்நாட்டுப் பாணியில் சொன்னால், எப்படி இருக்கும்? புல்லரித்துப் போகும் இல்லையா? அதையே நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஒரு வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போனால்? அதுவும் நமக்கு இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்மப்பா, அப்பப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டுப் போயிருந்தால்? “பரம்பரை பரம்பரையாக வீராதி வீரர்கள்டா நாங்க” என்று சொல்லிக்கொண்டு சுவரில் சாய்ந்து தலைகீழாகத் தான் நின்றிருப்போம், அப்படித்தானே? அப்போது ஏறாவூர்ப்பற்றின் வடக்கெல்லையான நட்டூர் ஆற்றிலிருந்து அக்கரைப்பற்றின் தெற்கெல்லையான சங்கமன்கண்டி வரை வரையறுக்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு நாடு. அந்த நாட்டில் வாழ்ந்தவர்களைப் பற்றித் தான் இப்படிப் புகழ்ந்து எழுதியிருக்கிறார் வான்கூன்ஸ். வான்கூன்ஸ்...? எங்கோ கேட்ட பெயர் மாதிரி இருக்க வேண்டுமே! இந்த மனிதன் தான்

பாணமை அரசனின் இராஜத்துரோகம்

படம்
ஒரு சிரச்சேதக் காட்சி (படம்: https://www.gettyimages.com ) போனவாரம் போரைதீவு, பழுகாமம், சம்மாந்துறை ஆகிய மூன்று அரசுகளையும், அவற்றுக்கிடையே இடம்பெற்ற சகோதரச் சண்டைகளையும் பார்த்தோம். நாம் பால்டியசை மேலும் ஊன்றிப் படிக்கும் போது சுவையான பல தகவல்கள் கிடைக்கின்றன. 1600ஆம் ஆண்டு காலத்தில் கிழக்கில் இருந்த அரசுகளாக அவர் விவரிப்பவை ஐந்து. கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், போரதீவு மற்றும் பாணமை. இவற்றில் பாணமையைப் பற்றியே மிக விரிவாக எழுதியிருக்கிறார் அவர்.  1592இல் கண்டியின் மன்னனாக அரசுக்கட்டில் ஏறினான் விமலதர்ம சூரியன். விமலதர்மனுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே வளர்ந்த பகையின் பலனாக 1594இல் ஒரு பெரும்போர் இடம்பெற்றது.  அதன் போது, கண்டி அரசின் பக்கத்தில் இணைந்திருந்த படையின் விவரங்களை முழுமையாக பதிவு செய்திருக்கிறார் பால்டியஸ். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு படியுங்கள். யாழ்ப்பாண அரசிலிருந்து 19,900 வீரர்கள், 10 போர்யானைகள், 40 கோட்டைகள், 3000 எருதுகள், 2000 முன்னணிவீரர்கள் என்பன கண்டி அரசுக்கு உதவியாக வழங்கப்பட்டிருந்தன. 7,890 வீரர்கள், 600 முன்னணிவீரர்கள், 1000 எருதுகள

சம்மாந்துறை எதிர் பழுகாமம் எதிர் போரைதீவு – ஒரு முக்கோணச்சமர்

படம்
- பால்டியசின் குறிப்புகளிலிருந்து.. 1611ஆம் ஆண்டு யூன் மாதம். கண்டி மகாராசன் செனரதனின் அரசவை. ஒற்றுச்செய்தி கிடைத்திருந்ததால், வந்து வணங்குபவன் பழுகாம மன்னனின் தூதன் என்பது அரசனுக்குத் தெரிந்திருந்தது. "மன்னா, போரைதீவு அரசனான ஞானசங்கரி, போர்த்துக்கேயருடன் கைகோர்த்திருக்கிறான். தன் ஆளுகைக்குட்பட்ட எல்லாத் துறைமுகங்களையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றான். அவனது படை  தங்களுக்கெதிராகக் கிளம்புவதற்கான இரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதை எங்கள் அரசரின் ஆணைக்கேற்ப தங்களிடம் முறைப்படி அறிவித்து எச்சரிக்கவே வந்தேன்" தூதன் பணிந்தான். "போரைதீவு மன்னன் ஞானசங்கரி, உங்கள் அரசன் செல்லப்பண்டாரத்தின் கூடப்பிறந்த தம்பி அல்லவா?"  செனரதனின் புருவங்கள் நெறிந்தன. "ஆம் அரசே. ஆனால் அரசியலில் உறவுகளுக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்பதே இராஜதந்திரத்தின் முதற்பாடம்." தூதன் பணிவாகத்தான் சொன்னான். போர்த்துக்கேயர்  ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் திருக்கோணமலையில் வெறியாட்டம் ஆடியிருந்தார்கள். கிழக்கில் பலம்வாய்ந்த ஒரு பின்னணி இருக்காமல் இந்த முயற்

நற்பிட்டிமுனை பாசம்! நிந்தவூர் நேசம்! அக்கரைப்பற்று ஆசம்!

படம்
மயிலாடும் மண்ணில் விருந்தோம்பும் வண்ணம்! - தோமஸ் அந்தோனி ரீடரின் நாட்குறிப்பிலிருந்து.. மட்டக்களப்புக்கு வந்தால் பாயோடு ஒட்டவைத்து விடுவார்கள் என்ற கருத்து இலங்கையின் வெளிமாகாணங்களில் உண்டு. உண்மையில் இங்கே சாப்பிட பாயில் உட்கார்ந்தால் உபசரித்து உபசரித்து எழ விடமாட்டார்கள், நமக்கும் பாயில் ஒட்டிவிட்ட பிரமை உண்டாகிவிடும். அதை, கிழக்கின் தனித்துவங்களுள் ஒன்றான மாந்திரீகத்தோடு இணைத்து சொல்லப்படும் நகையாடல் தான் பாயோடு ஒட்டும் கதை. “ஒருக்கா வந்தால் ஆயுசுக்கும் சோறு போடுறீங்கடா, இனி இங்காலைப்பக்கம் இவன் வரவே கூடாது எண்டு பிளான் பண்ணித்தானே இப்பிடித் தாறீங்கள்?”, “அடேய் பெற்றி அம்பாரைக்கு ட்ரிப் அடிக்கிறண்டா வெறுவயித்தோட போங்கோ! ஒருநாள் ருவர் போனா கிடைக்கிற சாப்பாட்டுக்கே ஒரு கிளமை ரொய்லெற்றில சீவியம் நடத்தோணும்” இதெல்லாம் தீவளாவிய நண்பர் வட்டாரங்களில் கிழக்குத் தொடர்பான நகைச்சுவை உரையாடல்களில் வழக்கமானவை. பொதுவாகவே இலங்கையின் விருந்தோம்பல் உலகப் புகழ்பெற்றது. இலங்கையின் எந்தப்பகுதிக்கு சுற்றுலா சென்றாலும், அங்கே கூட உணவு விடயத்தில் இதே கவனிப்புத் தான் கிடைக்கிறது. அப்படி இருக்க,

சீலைக்குப் பின் சிலை? - ‘திரை’க்கதை சொல்லும் தெய்வானை!

படம்
....கதிர்காமம் யாருக்குச் சொந்தம் பாகம் 03 கதிர்காமம் (படம்:  kataragama.org ) போனகிழமை “கதிர்காமம் பௌத்தருக்கு சொந்தமாக இருக்கலாம்” என்று சொன்னதில் உங்களில் பலர் கெட்ட கோபத்தில் இருப்பீர்கள் என்று தெரியும். அதில் அர்த்தமே இல்லை. கோபிக்காமல், அந்தக் கட்டுரையை இன்னொரு முறை வாசியுங்களேன். அங்கு, சைவம், பௌத்தம் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, தமிழ் – சிங்களம் பற்றியே சொல்லப்படவில்லை. விஷ்ணுவும் முருகனும், மிகப்பழைய தமிழ்த்தெய்வங்கள். இலங்கையில் முருகன் பற்றிக்கிடைக்கும் சான்றுகள் கூட, சோழ – பாண்டிய ஆக்கிரமிப்புகளின் பின்னணியிலேயே பௌத்த நூல்களில் பதிவாகியுள்ளன என்பதை நாம் ஊன்றி நோக்கவேண்டும். முருகன் பௌத்தத் தெய்வமாக விளங்கிய முக்கியமான ஒரு சான்று, குருநாகலருகே தமிழ் விகாரையொன்றின் இடிபாட்டில் கிடைத்ததைக்கூட அங்கு நாம் பார்த்தோம். இன்று தமிழர் பௌத்தராக இல்லை என்பதற்காக, தமிழுக்கு பௌத்தம் மீதுள்ள தார்மிக உரிமையை நாம் மறுக்கமுடியாது தானே?  வெளிக்காரணிகளால் ஒரு சமூகம் கூட்டாக மதம் மாறும் போது, தன் பழைய பாரம்பரியத்தையோ மரபுகளையோ மறக்காமல், தான் கைக்கொண்ட புதிய சமயத்திலு

பௌத்தரின் கதிர்காமமும் தாய்லாந்தும்!

படம்
கதிர்காமம் கட்டுரைத் தொடர் 02 பார்வதி மாணிக்கத் துக்கு கொஞ்ச ம் சாப்பாடு தான் கிடைத்தது . அவளுக் கு இரு மகன்கள். கணவன் ஈஸ்வரனை பரிதாபமாகப் பார்த்தாள் அவள் . ஈஸ்வரனோ புன்னகைத்த படி , இரு மகன் மாரை யும் அழைத்தார். “ கொஞ்சமே உணவு இருப்பதால் , ஒருவருக்கே தர முடியும் செல்வங் களே ! உங்களில் யார் முதன்முதலில் இந்த உவர்நீர்ப்பரப்பை வலம் வருகின்றார்களோ அவருக்கே இந்த சாப்பாடு . ” என்று அருகே கடலைக் காட்டினார் அவர் . ஒருசொல்லும் சொல்லாமல் இளையவன் கந்தகுமாரன் , தன் மயிலில் ஏறிப் பறந்தான் , சமுத்திரத்தை வலம்வர! என்னடா எங்கயோ கேட்டமாதிரி …. அ டேய் , இது ஞா னப்பழம் கதை தானே என்று முறைக் காதீர்கள் . பொறுமை ! முழுக்க வாசியுங்கள ன் ! மூத்தவன் குண்டுக் கணநாத ன் யோசித்தான். கடலைச் சுற்றுவது என்ன , வீட்டிலிருந்து கடற்கரைக்குக் கூட அவனால் நடக்கமுடியாது . இரண்டு எட்டு வைத்தாலே இளைக்கும் ‘ சீனி வருத்த ’ உடம்பு அவனுக்கு . ஆனால் உடம்பை விடப்பெரிய மூளை . தலை வேறு யானைத்தலை இல்லையா ! “ அப்பா உவர்நீர்ப்பரப்பை அல்லவா சுற்றிவரச் சொன்னார். உவர்நீர் …. உப்பு.. நீர் …...! அப்படியென்றால் …” அவன்