இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீலைக்குப் பின் சிலை? - ‘திரை’க்கதை சொல்லும் தெய்வானை!

படம்
....கதிர்காமம் யாருக்குச் சொந்தம் பாகம் 03 கதிர்காமம் (படம்:  kataragama.org ) போனகிழமை “கதிர்காமம் பௌத்தருக்கு சொந்தமாக இருக்கலாம்” என்று சொன்னதில் உங்களில் பலர் கெட்ட கோபத்தில் இருப்பீர்கள் என்று தெரியும். அதில் அர்த்தமே இல்லை. கோபிக்காமல், அந்தக் கட்டுரையை இன்னொரு முறை வாசியுங்களேன். அங்கு, சைவம், பௌத்தம் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, தமிழ் – சிங்களம் பற்றியே சொல்லப்படவில்லை. விஷ்ணுவும் முருகனும், மிகப்பழைய தமிழ்த்தெய்வங்கள். இலங்கையில் முருகன் பற்றிக்கிடைக்கும் சான்றுகள் கூட, சோழ – பாண்டிய ஆக்கிரமிப்புகளின் பின்னணியிலேயே பௌத்த நூல்களில் பதிவாகியுள்ளன என்பதை நாம் ஊன்றி நோக்கவேண்டும். முருகன் பௌத்தத் தெய்வமாக விளங்கிய முக்கியமான ஒரு சான்று, குருநாகலருகே தமிழ் விகாரையொன்றின் இடிபாட்டில் கிடைத்ததைக்கூட அங்கு நாம் பார்த்தோம். இன்று தமிழர் பௌத்தராக இல்லை என்பதற்காக, தமிழுக்கு பௌத்தம் மீதுள்ள தார்மிக உரிமையை நாம் மறுக்கமுடியாது தானே?  வெளிக்காரணிகளால் ஒரு சமூகம் கூட்டாக மதம் மாறும் போது, தன் பழைய பாரம்பரியத்தையோ மரபுகளையோ மறக்காமல், தான் கைக்கொண்ட புதிய சமயத்திலு

பௌத்தரின் கதிர்காமமும் தாய்லாந்தும்!

படம்
கதிர்காமம் கட்டுரைத் தொடர் 02 பார்வதி மாணிக்கத் துக்கு கொஞ்ச ம் சாப்பாடு தான் கிடைத்தது . அவளுக் கு இரு மகன்கள். கணவன் ஈஸ்வரனை பரிதாபமாகப் பார்த்தாள் அவள் . ஈஸ்வரனோ புன்னகைத்த படி , இரு மகன் மாரை யும் அழைத்தார். “ கொஞ்சமே உணவு இருப்பதால் , ஒருவருக்கே தர முடியும் செல்வங் களே ! உங்களில் யார் முதன்முதலில் இந்த உவர்நீர்ப்பரப்பை வலம் வருகின்றார்களோ அவருக்கே இந்த சாப்பாடு . ” என்று அருகே கடலைக் காட்டினார் அவர் . ஒருசொல்லும் சொல்லாமல் இளையவன் கந்தகுமாரன் , தன் மயிலில் ஏறிப் பறந்தான் , சமுத்திரத்தை வலம்வர! என்னடா எங்கயோ கேட்டமாதிரி …. அ டேய் , இது ஞா னப்பழம் கதை தானே என்று முறைக் காதீர்கள் . பொறுமை ! முழுக்க வாசியுங்கள ன் ! மூத்தவன் குண்டுக் கணநாத ன் யோசித்தான். கடலைச் சுற்றுவது என்ன , வீட்டிலிருந்து கடற்கரைக்குக் கூட அவனால் நடக்கமுடியாது . இரண்டு எட்டு வைத்தாலே இளைக்கும் ‘ சீனி வருத்த ’ உடம்பு அவனுக்கு . ஆனால் உடம்பை விடப்பெரிய மூளை . தலை வேறு யானைத்தலை இல்லையா ! “ அப்பா உவர்நீர்ப்பரப்பை அல்லவா சுற்றிவரச் சொன்னார். உவர்நீர் …. உப்பு.. நீர் …...! அப்படியென்றால் …” அவன்