இடுகைகள்

ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நற்பிட்டிமுனை பாசம்! நிந்தவூர் நேசம்! அக்கரைப்பற்று ஆசம்!

படம்
மயிலாடும் மண்ணில் விருந்தோம்பும் வண்ணம்! - தோமஸ் அந்தோனி ரீடரின் நாட்குறிப்பிலிருந்து.. மட்டக்களப்புக்கு வந்தால் பாயோடு ஒட்டவைத்து விடுவார்கள் என்ற கருத்து இலங்கையின் வெளிமாகாணங்களில் உண்டு. உண்மையில் இங்கே சாப்பிட பாயில் உட்கார்ந்தால் உபசரித்து உபசரித்து எழ விடமாட்டார்கள், நமக்கும் பாயில் ஒட்டிவிட்ட பிரமை உண்டாகிவிடும். அதை, கிழக்கின் தனித்துவங்களுள் ஒன்றான மாந்திரீகத்தோடு இணைத்து சொல்லப்படும் நகையாடல் தான் பாயோடு ஒட்டும் கதை. “ஒருக்கா வந்தால் ஆயுசுக்கும் சோறு போடுறீங்கடா, இனி இங்காலைப்பக்கம் இவன் வரவே கூடாது எண்டு பிளான் பண்ணித்தானே இப்பிடித் தாறீங்கள்?”, “அடேய் பெற்றி அம்பாரைக்கு ட்ரிப் அடிக்கிறண்டா வெறுவயித்தோட போங்கோ! ஒருநாள் ருவர் போனா கிடைக்கிற சாப்பாட்டுக்கே ஒரு கிளமை ரொய்லெற்றில சீவியம் நடத்தோணும்” இதெல்லாம் தீவளாவிய நண்பர் வட்டாரங்களில் கிழக்குத் தொடர்பான நகைச்சுவை உரையாடல்களில் வழக்கமானவை. பொதுவாகவே இலங்கையின் விருந்தோம்பல் உலகப் புகழ்பெற்றது. இலங்கையின் எந்தப்பகுதிக்கு சுற்றுலா சென்றாலும், அங்கே கூட உணவு விடயத்தில் இதே கவனிப்புத் தான் கிடைக்கிறது. அப்படி இருக்க, ...

பட்டிமேட்டு அம்மன்! பாழடைந்த நாடுகாடு!

படம்
- நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டிலிருந்து நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டில் கிடைக்கின்ற சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடத்தக்கது , பட்டிமேட்டு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய குறிப்பு . கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தோற்றம் , வளர்ச்சி பற்றிய தகவல்களை ஆராய , இக்கல்வெட்டு முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகின்றது . கண்ணகி வழிபாட்டைப் பொறுத்தவரை , கிழக்கிலங்கையில் தம்பிலுவில் , பட்டிமேடு , காரைதீவு ஆகிய மூன்று இடங்களையும் முதன்மையான இடங்களாகக் குறிப்பிடுவது மரபு . இவை மூன்றிலும் , நாடுகாடுப் பரவணியில் பட்டிமேடு , காரைதீவு என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன . தம்பிலுவில்லுக்குப் பதிலாக கோவில்மேடு என்றோர் இடம் சொல்லப்படுகின்றது . பட்டிமேட்டு அம்மன் கோவில் மதுரைக்குப் போய் கண்ணகியை வணங்கி வந்த சின்னத்தம்பிப் போடியிடம் “ நான் இங்கே இருக்க நீ அங்கே போகவேண்டாமென்று ” என்று அம்மன் சொல்லி , கோவில்மேட்டில் கோவில் கொண்டாள் . வோறாகொடைக் கல்லிலிருந்து ( சடையந்தலாவையின் வீரகொட எல்ல ?) பரிவார தெய்வங்களைக் கொணர்ந்து , வழிபாட்டுக்கென சிங்களக்கட்டாடியையும் பெண்சாதியையும் சிங்களப்பத்ததி...

ஆளே நீங்க எவடம்?

படம்
மட்டு -  அம்பாறை இடப்பெயர் ஆய்வுகள் கிழக்கிலங்கைக் கிராமங்கள் வரலாறு, சரித்திரம் என்றெல்லாம் என்னென்னவோ  எல்லாம் ஆராய்கிறோம். ஆனால் மிகச்சிறிய விடயம் கூட, பென்னம்பெரிய வரலாற்றைக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஏன், உங்கள் ஊரின் பெயரை யோசித்திருக்கிறீர்களா? அதுவே ஆயிரம் கதை சொல்லும்.  தொன்மங்கள் வேறுபட்டாலும், பொதுவாக ஊர்கள், இயற்கைக் காரணிகளை மையமாகவே வைத்தே தோற்றம் பெறுகின்றன. மரமோ, புவியியல் அமைப்பொன்றோ காரணமாக பெயர் பெறாத ஊர்கள் மிகக்குறைவு.  இப்படிப் பெயர் பெற்றிருக்கின்ற மட்டு-அம்பாறை மாவட்டங்களின் முக்கியமான சில ஊர்களை மாத்திரம் இங்கு பார்க்கலாம். பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான செங்கற்படை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்றுக்கு அந்தப்பெயர் வந்தது. இந்தப் பற்றின் தலைமைநகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டி என்றால் ஒருவகை நீர்க்கிழங்கு.   அதுபோல,  சேனைக்காவலில் பயன்படும் உயரமான காவலரண் 'அட்டாளை' என்று அழைக்கப்படும். அட்டாளை அமைந்திருந்த சேனை அட்டாளைச்சே...

தீபாவளி - ஒரு அலசல்

படம்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வழக்கம் போலவே ஆரியப்பண்டிகை, நரகாசுரன் தமிழன், அவனைக் கொன்ற ஐயர் ஆத்து மாமி சத்தியபாமா, வடை சுடு ஆனால் வெடி சுடாதே போன்ற வாதங்கள் சமவலைத்தளங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. முழு இந்தியத் தீபகற்பமுமே கொண்டாடும் தீபாவளி, உண்மையிலேயே தமிழர் மத்தியில் திணிக்கப்பட்ட விழாவா? அது ஆரியப்பண்டிகையா?