இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மேதியவுணன்கொல்பாவை வாழ்த்து - தமிழ் மகிடாசுரமர்த்தினி தோத்திரம்!

படம்
"அயிகிரி நந்தினி நந்திதமேதினி" என்று ஆரம்பிக்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை அறியாதவர்கள் நம்மில் யாரும் இருக்கமுடியாது!   கொலுவுக்கு அடுத்தபடியாக, நவராத்திரி என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது, மகிடாசுரனும், இந்த மகிடாசுரமர்த்தினி தோத்திரமும்தான்! அதற்குள்ள இயல்பான கவர்ச்சியும், பாடும்போதெழும் உணர்ச்சிப்பெருக்கும், ஏனைய இறைதுதிகளை விட, அதற்கு மட்டும் தனித்துவத்தை ஏற்படுத்திவைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. இத்துதியானது, “இராமகிருஷ்ண கவி” பாடியது என்றும், ஆதிசங்கரர் பாடியது என்றும் இருவேறு கருத்துள்ளது.

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

படம்
(கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் ஆண்டிதழான இளந்தென்றலின் 2016ஆம் ஆண்டுக்கான மலரில் வெளியான கட்டுரையின் சுருக்கம்) தலைப்பைப் படித்த பின்னும், கட்டுரையின் நீளத்தைப் பார்த்து சலித்து, கொட்டாவி விட்டு, வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடாமல், இந்த முதல் வரியைப் படிக்கிறீர்களென்றால்… நன்றி. நம்புகிறேன், வழக்கமான “மெல்லத் தமிழ் இனி!” என்ற அமங்கலச் சொற்றொடருக்கு முடிவுகட்டும் தலைமுறை இதோ, கைகோர்க்கிறதென்று…