இடுகைகள்

போர்த்துக்கேயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாணமை மன்னன், பலம் வாய்ந்த தமிழரசுகள்

படம்
பால்டியசின் குறிப்புகளிலிருந்து 03 இலங்கையின் பழைய வரைபடமொன்றில் பாணமை போனகிழமை போர்த்துக்கேயருக்கு எதிரான கண்டி அரசின் போரில், யாழ்ப்பாண அரசும், கண்டியின் திறைநாடுகளும் வழங்கிய உதவிகளின் பட்டியலைப் பார்த்திருந்தோம். இந்த எண்ணிக்கையில் எந்தளவு உண்மை இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இவற்றில் மிகைப்படுத்தலோ இட்டுக்கட்டல்களோ இருந்தாலும், அங்கு சொல்லப்படும் எண்ணிக்கைகளை, அந்தந்த சிற்றரசுகளின் வலிமையை ஒப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில் பாணமை அரசும் அதன் துணை அரசுகளும் கொடுத்திருந்த படையுதவியின் எண்ணிக்கை, அப்போதைய தனியரசுகளில் ஒன்றான யாழ்ப்பாண அரசு கொடுத்த படை உதவியை விட சுமார் மூன்று மடங்கு அதிகம். எனவே பாணமை அரசு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கக்கூடும். கிழக்கில் இருந்த அரசுகளில் மட்டக்களப்பும் பழுகாமமும் பாணமை அரசனுக்கு சீதனமாக வழங்கப்பட்டிருந்தன என்ற தகவலும் கவனத்தை ஈர்க்கிறது.  கண்டி அரசுக்குத் திறை செலுத்திய மட்டக்களப்பு அரசும் பழுகாம அரசும், பாணமை மன்னனை கொஞ்சகாலம் கண்டி அரசின் பிரதிநிதியாக ஏற்று இருந்திருக்கின்றன என்பது இதன் மூலம் த...

சம்மாந்துறை எதிர் பழுகாமம் எதிர் போரைதீவு – ஒரு முக்கோணச்சமர்

படம்
- பால்டியசின் குறிப்புகளிலிருந்து.. 1611ஆம் ஆண்டு யூன் மாதம். கண்டி மகாராசன் செனரதனின் அரசவை. ஒற்றுச்செய்தி கிடைத்திருந்ததால், வந்து வணங்குபவன் பழுகாம மன்னனின் தூதன் என்பது அரசனுக்குத் தெரிந்திருந்தது. "மன்னா, போரைதீவு அரசனான ஞானசங்கரி, போர்த்துக்கேயருடன் கைகோர்த்திருக்கிறான். தன் ஆளுகைக்குட்பட்ட எல்லாத் துறைமுகங்களையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றான். அவனது படை  தங்களுக்கெதிராகக் கிளம்புவதற்கான இரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதை எங்கள் அரசரின் ஆணைக்கேற்ப தங்களிடம் முறைப்படி அறிவித்து எச்சரிக்கவே வந்தேன்" தூதன் பணிந்தான். "போரைதீவு மன்னன் ஞானசங்கரி, உங்கள் அரசன் செல்லப்பண்டாரத்தின் கூடப்பிறந்த தம்பி அல்லவா?"  செனரதனின் புருவங்கள் நெறிந்தன. "ஆம் அரசே. ஆனால் அரசியலில் உறவுகளுக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்பதே இராஜதந்திரத்தின் முதற்பாடம்." தூதன் பணிவாகத்தான் சொன்னான். போர்த்துக்கேயர்  ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் திருக்கோணமலையில் வெறியாட்டம் ஆடியிருந்தார்கள். கிழக்கில் பலம்வாய்ந்த ஒரு பின்னணி இருக்காமல் இந்த முயற்...

“வியாளை அரசியின் மட்டக்களப்பு மருமகன்”

படம்
(கோயம்பராவின் குறிப்புகளிலிருந்து..) கதிர்காமம் நடந்து போகும் எல்லாருக்கும் “வியாளை” என்பது நன்கு அறிமுகமான பெயர். குமுக்கனாற்றுக்கும் கதிர்காமத்துக்கும் இடையில் பரந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி அது. சிங்களத்தில் அதை “யால” என்று சொல்லுவார்கள். கதிர்காம யாத்திரை செல்கின்ற பலர், வியாளையில் ‘கொள்ளி‘பொறுக்கவோ ‘கடன்‘ கழிக்கவோ அந்தப்பக்கம் இந்தப்பக்கம் செல்லும் போது, அங்கு கட்டிட இடிபாடுகளையும் சிதைந்த தொல்பொருள் எச்சங்களையும் காண்பது வழக்கம். ஏனென்றால் பழங்காலத்தில் மக்கள் செறிந்து வாழ்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்த இடம், வியாளை. வியாளையில் பாயும் மாணிக்க கங்கை சிங்கள வரலாற்று நூல்கள்  சொல்லும் உரோகண நாடு, தென்கிழக்கிலங்கையில் அமைந்திருந்ததாகவும், அதன் தலைநகர் மாகாமம் (இன்றைய திஸ்ஸமகாராமை– கிரிந்த பகுதி) என்றும் சொல்லுவார்கள். அந்த நாட்டின் வட எல்லை, இன்றைய அம்பாறை மாவட்டம்வரை விரிந்திருந்தது என்று கொள்வதற்கு பல சான்றுகள் உள்ளன. மாணிக்ககங்கைக்கு வடக்கே, மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்திருந்த “உன்னரசுகிரி” என்னும் இராசதானி பற்றி ‘மட்டக்களப்புப் பூர்வசரித...