இடுகைகள்

தம்பிலுவில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டிமேட்டு அம்மன்! பாழடைந்த நாடுகாடு!

படம்
- நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டிலிருந்து நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டில் கிடைக்கின்ற சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடத்தக்கது , பட்டிமேட்டு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய குறிப்பு . கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தோற்றம் , வளர்ச்சி பற்றிய தகவல்களை ஆராய , இக்கல்வெட்டு முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகின்றது . கண்ணகி வழிபாட்டைப் பொறுத்தவரை , கிழக்கிலங்கையில் தம்பிலுவில் , பட்டிமேடு , காரைதீவு ஆகிய மூன்று இடங்களையும் முதன்மையான இடங்களாகக் குறிப்பிடுவது மரபு . இவை மூன்றிலும் , நாடுகாடுப் பரவணியில் பட்டிமேடு , காரைதீவு என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன . தம்பிலுவில்லுக்குப் பதிலாக கோவில்மேடு என்றோர் இடம் சொல்லப்படுகின்றது . பட்டிமேட்டு அம்மன் கோவில் மதுரைக்குப் போய் கண்ணகியை வணங்கி வந்த சின்னத்தம்பிப் போடியிடம் “ நான் இங்கே இருக்க நீ அங்கே போகவேண்டாமென்று ” என்று அம்மன் சொல்லி , கோவில்மேட்டில் கோவில் கொண்டாள் . வோறாகொடைக் கல்லிலிருந்து ( சடையந்தலாவையின் வீரகொட எல்ல ?) பரிவார தெய்வங்களைக் கொணர்ந்து , வழிபாட்டுக்கென சிங்களக்கட்டாடியையும் பெண்சாதியையும் சிங்களப்பத்ததி...

பொற்புறா அன்னை!

படம்
வைகாசி பிறந்தாலே கிழக்குக்கரையோரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிடும். ஊரெல்லாம் கண்ணகியின் நாட்கள் கழிந்துகொண்டிருக்கும். அந்தக் கொண்டாட்ட நாட்களில், கண்ணகி தொடர்பான அரிய தகவல்கள் எதையும் பார்ப்பதே பொருத்தமானது, இல்லையா? சிவாகமவிதிக்கு உட்பட்டு, மேல்நிலையாக்கத்துக்கு ஆளான எல்லாக் கண்ணகி ஆலயங்களிலும் சிங்கமே அவள் வாகனமாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அரிதாக நந்தியும் அவள் வாகனமாகச் சொல்லப்படும். ஆனால், கிழக்கிலங்கை மரபில் கண்ணகியின் ஊர்தி எது தெரியுமா? புறா, பொன்னிறப் புறா, பொற்புறா! கிழக்கிலங்கையில் மிகப்பழையவையாக இனங்காணப்படும் கண்ணகி ஆலயங்கள் மூன்று. பட்டிமேடு, தம்பிலுவில் மற்றும் காரைதீவு. அவற்றில் முதல் இரண்டிலும், கண்ணகிக்கும் புறாவுக்கும் உள்ள உறவு, இன்றும் விசேடமாக நினைவுகூரப்படுகிறது. தம்பிலுவில் அம்மன் கோயிலின் தோற்றம் தொடர்பான ஒரு கதையில் புறா இணைத்துச் சொல்லப்படுகிறது.  பெண்கள் விறகு பொறுக்க வந்தபோது அவர்களை அலைக்கழித்த ஒரு வினோதமான பொன்னிறப் புறா, “கண்ணகி!” என்று குனுகியதாகவும், அது மறைந்த இடத்தில், இங்குள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும்,...