பட்டிமேட்டு அம்மன்! பாழடைந்த நாடுகாடு!
- நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டிலிருந்து நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டில் கிடைக்கின்ற சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடத்தக்கது , பட்டிமேட்டு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய குறிப்பு . கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தோற்றம் , வளர்ச்சி பற்றிய தகவல்களை ஆராய , இக்கல்வெட்டு முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகின்றது . கண்ணகி வழிபாட்டைப் பொறுத்தவரை , கிழக்கிலங்கையில் தம்பிலுவில் , பட்டிமேடு , காரைதீவு ஆகிய மூன்று இடங்களையும் முதன்மையான இடங்களாகக் குறிப்பிடுவது மரபு . இவை மூன்றிலும் , நாடுகாடுப் பரவணியில் பட்டிமேடு , காரைதீவு என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன . தம்பிலுவில்லுக்குப் பதிலாக கோவில்மேடு என்றோர் இடம் சொல்லப்படுகின்றது . பட்டிமேட்டு அம்மன் கோவில் மதுரைக்குப் போய் கண்ணகியை வணங்கி வந்த சின்னத்தம்பிப் போடியிடம் “ நான் இங்கே இருக்க நீ அங்கே போகவேண்டாமென்று ” என்று அம்மன் சொல்லி , கோவில்மேட்டில் கோவில் கொண்டாள் . வோறாகொடைக் கல்லிலிருந்து ( சடையந்தலாவையின் வீரகொட எல்ல ?) பரிவார தெய்வங்களைக் கொணர்ந்து , வழிபாட்டுக்கென சிங்களக்கட்டாடியையும் பெண்சாதியையும் சிங்களப்பத்ததி...