இடுகைகள்

இறக்காமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டிமேட்டு அம்மன்! பாழடைந்த நாடுகாடு!

படம்
- நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டிலிருந்து நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டில் கிடைக்கின்ற சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடத்தக்கது , பட்டிமேட்டு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய குறிப்பு . கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தோற்றம் , வளர்ச்சி பற்றிய தகவல்களை ஆராய , இக்கல்வெட்டு முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகின்றது . கண்ணகி வழிபாட்டைப் பொறுத்தவரை , கிழக்கிலங்கையில் தம்பிலுவில் , பட்டிமேடு , காரைதீவு ஆகிய மூன்று இடங்களையும் முதன்மையான இடங்களாகக் குறிப்பிடுவது மரபு . இவை மூன்றிலும் , நாடுகாடுப் பரவணியில் பட்டிமேடு , காரைதீவு என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன . தம்பிலுவில்லுக்குப் பதிலாக கோவில்மேடு என்றோர் இடம் சொல்லப்படுகின்றது . பட்டிமேட்டு அம்மன் கோவில் மதுரைக்குப் போய் கண்ணகியை வணங்கி வந்த சின்னத்தம்பிப் போடியிடம் “ நான் இங்கே இருக்க நீ அங்கே போகவேண்டாமென்று ” என்று அம்மன் சொல்லி , கோவில்மேட்டில் கோவில் கொண்டாள் . வோறாகொடைக் கல்லிலிருந்து ( சடையந்தலாவையின் வீரகொட எல்ல ?) பரிவார தெய்வங்களைக் கொணர்ந்து , வழிபாட்டுக்கென சிங்களக்கட்டாடியையும் பெண்சாதியையும் சிங்களப்பத்ததி...

அரச மானியம் பெற்ற பள்ளிவாசல்! விகாரை ஊழியம் செய்த தமிழர்!

படம்
நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டிலிருந்து …. இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் , “ பற்று ” என்ற பெயரில் சிறுசிறு ஆட்சிப்பிரிவுகளாக நிலவி வந்தது , உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் . இன்றும் , அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று , பாணமைப்பற்று ஆகிய பெயர்களையும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் எருவிற்பற்று , போரதீவுப்பற்று , மண்முனைப்பற்று முதலான பெயர்களையும் நம்மால் காணக்கூடியதாக இருக்கிறது . இப்படி முன்பொருமுறை கிழக்கிலங்கையில் வழக்கிலிருந்து மறைந்து போன பற்றுப்பிரிவு தான் , நாடுகாடுப்பற்று . 1812 வரைபடமொன்றில் நாடுகாடு (Nadekadoe) நாடுகாடுப்பற்று இன்றைய அம்பாறை , இறக்காமம் , தமணை பிரதேச செயலகப் பிரிவுகளையும் , சம்மாந்துறை – அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளின் சில பகுதிகளையும் அடக்கியதாக இருந்தது . நாடுகாடுப்பற்று என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது   என்பதற்கான சான்று கிடைக்கவில்லை . அந்தப் பற்று , குடியிருப்புகள் உருவாகி நாடாக விளங்கி , அதே வேகத்திலேயே பாழடைந்து காடாக மாறியதால் அதற்கு நாடுகாடுப்பற்று என்ற பெயர் வந்ததாக ஒருசாரார் கூறுவார் . ஆனால் இலங்கை வரலாற்றில் , குறிப்பாக ...