இடுகைகள்

கதிர்காமப் பெருமாளே!

படம்
கதிர்காமம் கட்டுரைத் தொடர்  01 வைகாசி , ஆனி மாதங்கள் வரை “ சாப்பிட்டையா ?” “ குளிச்சியா ?” என்பது போல எப்போதாவது சந்தித்துக்கொள்ளும் போது , கிழக்கிலங்கைத் தமிழ்க் கிராமங்களில் சாதாரணமாகக் கேட்கப்படும் இரு கேள்விகள் இருக்கின்றன . “ எப்பயாம் சடங்கு தொடங்குது ?”, “ எப்பயாம் கதிராமக் கொடியேத்தம் ? நீ நடக்கிறதா ?” முன்னையது கண்ணகி அம்மனோடு தொடர்பு கொண்டது . பின்னையது எதனோடு தொடர்புடையது என்று சொல்லத்தேவையில்லை .     கதிர்காமக் கந்தன் ஆலயம் கதிர்காமத்துக்கும் கிழக்கிலங்கைக்கும் உள்ள உறவு எந்த விதத்திலும் மறைக்க முடியாதது . அங்குள்ள பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்களுக்கும் , அவற்றைச் சுற்றி உருவான ஊர்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் கதிர்காமப் பாதயாத்திரிகர்கள் தான் . நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலரும் கதிர்காமம் வருகை தந்தாலும் அங்கு செல்லும் யாத்திரிகர்களில் எண்ணிக்கையில் முறியடிக்க முடியாதவர்கள் , கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்களே . “ கதிர்காமம் நடந்து போதல் ” என்பதை , வருடத்துக்கொருமுறை தவறாமல் செய்யவேண்டிய காரியம் போல நியதியாக வைத்திருப்பவர்களை இங்கே காணலாம் . குறி...

பட்டிமேட்டு அம்மன்! பாழடைந்த நாடுகாடு!

படம்
- நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டிலிருந்து நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டில் கிடைக்கின்ற சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடத்தக்கது , பட்டிமேட்டு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய குறிப்பு . கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தோற்றம் , வளர்ச்சி பற்றிய தகவல்களை ஆராய , இக்கல்வெட்டு முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகின்றது . கண்ணகி வழிபாட்டைப் பொறுத்தவரை , கிழக்கிலங்கையில் தம்பிலுவில் , பட்டிமேடு , காரைதீவு ஆகிய மூன்று இடங்களையும் முதன்மையான இடங்களாகக் குறிப்பிடுவது மரபு . இவை மூன்றிலும் , நாடுகாடுப் பரவணியில் பட்டிமேடு , காரைதீவு என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன . தம்பிலுவில்லுக்குப் பதிலாக கோவில்மேடு என்றோர் இடம் சொல்லப்படுகின்றது . பட்டிமேட்டு அம்மன் கோவில் மதுரைக்குப் போய் கண்ணகியை வணங்கி வந்த சின்னத்தம்பிப் போடியிடம் “ நான் இங்கே இருக்க நீ அங்கே போகவேண்டாமென்று ” என்று அம்மன் சொல்லி , கோவில்மேட்டில் கோவில் கொண்டாள் . வோறாகொடைக் கல்லிலிருந்து ( சடையந்தலாவையின் வீரகொட எல்ல ?) பரிவார தெய்வங்களைக் கொணர்ந்து , வழிபாட்டுக்கென சிங்களக்கட்டாடியையும் பெண்சாதியையும் சிங்களப்பத்ததி...

அரச மானியம் பெற்ற பள்ளிவாசல்! விகாரை ஊழியம் செய்த தமிழர்!

படம்
நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டிலிருந்து …. இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் , “ பற்று ” என்ற பெயரில் சிறுசிறு ஆட்சிப்பிரிவுகளாக நிலவி வந்தது , உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் . இன்றும் , அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று , பாணமைப்பற்று ஆகிய பெயர்களையும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் எருவிற்பற்று , போரதீவுப்பற்று , மண்முனைப்பற்று முதலான பெயர்களையும் நம்மால் காணக்கூடியதாக இருக்கிறது . இப்படி முன்பொருமுறை கிழக்கிலங்கையில் வழக்கிலிருந்து மறைந்து போன பற்றுப்பிரிவு தான் , நாடுகாடுப்பற்று . 1812 வரைபடமொன்றில் நாடுகாடு (Nadekadoe) நாடுகாடுப்பற்று இன்றைய அம்பாறை , இறக்காமம் , தமணை பிரதேச செயலகப் பிரிவுகளையும் , சம்மாந்துறை – அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளின் சில பகுதிகளையும் அடக்கியதாக இருந்தது . நாடுகாடுப்பற்று என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது   என்பதற்கான சான்று கிடைக்கவில்லை . அந்தப் பற்று , குடியிருப்புகள் உருவாகி நாடாக விளங்கி , அதே வேகத்திலேயே பாழடைந்து காடாக மாறியதால் அதற்கு நாடுகாடுப்பற்று என்ற பெயர் வந்ததாக ஒருசாரார் கூறுவார் . ஆனால் இலங்கை வரலாற்றில் , குறிப்பாக ...

ஆளே நீங்க எவடம்?

படம்
மட்டு -  அம்பாறை இடப்பெயர் ஆய்வுகள் கிழக்கிலங்கைக் கிராமங்கள் வரலாறு, சரித்திரம் என்றெல்லாம் என்னென்னவோ  எல்லாம் ஆராய்கிறோம். ஆனால் மிகச்சிறிய விடயம் கூட, பென்னம்பெரிய வரலாற்றைக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஏன், உங்கள் ஊரின் பெயரை யோசித்திருக்கிறீர்களா? அதுவே ஆயிரம் கதை சொல்லும்.  தொன்மங்கள் வேறுபட்டாலும், பொதுவாக ஊர்கள், இயற்கைக் காரணிகளை மையமாகவே வைத்தே தோற்றம் பெறுகின்றன. மரமோ, புவியியல் அமைப்பொன்றோ காரணமாக பெயர் பெறாத ஊர்கள் மிகக்குறைவு.  இப்படிப் பெயர் பெற்றிருக்கின்ற மட்டு-அம்பாறை மாவட்டங்களின் முக்கியமான சில ஊர்களை மாத்திரம் இங்கு பார்க்கலாம். பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான செங்கற்படை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்றுக்கு அந்தப்பெயர் வந்தது. இந்தப் பற்றின் தலைமைநகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டி என்றால் ஒருவகை நீர்க்கிழங்கு.   அதுபோல,  சேனைக்காவலில் பயன்படும் உயரமான காவலரண் 'அட்டாளை' என்று அழைக்கப்படும். அட்டாளை அமைந்திருந்த சேனை அட்டாளைச்சே...

பொற்புறா அன்னை!

படம்
வைகாசி பிறந்தாலே கிழக்குக்கரையோரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிடும். ஊரெல்லாம் கண்ணகியின் நாட்கள் கழிந்துகொண்டிருக்கும். அந்தக் கொண்டாட்ட நாட்களில், கண்ணகி தொடர்பான அரிய தகவல்கள் எதையும் பார்ப்பதே பொருத்தமானது, இல்லையா? சிவாகமவிதிக்கு உட்பட்டு, மேல்நிலையாக்கத்துக்கு ஆளான எல்லாக் கண்ணகி ஆலயங்களிலும் சிங்கமே அவள் வாகனமாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அரிதாக நந்தியும் அவள் வாகனமாகச் சொல்லப்படும். ஆனால், கிழக்கிலங்கை மரபில் கண்ணகியின் ஊர்தி எது தெரியுமா? புறா, பொன்னிறப் புறா, பொற்புறா! கிழக்கிலங்கையில் மிகப்பழையவையாக இனங்காணப்படும் கண்ணகி ஆலயங்கள் மூன்று. பட்டிமேடு, தம்பிலுவில் மற்றும் காரைதீவு. அவற்றில் முதல் இரண்டிலும், கண்ணகிக்கும் புறாவுக்கும் உள்ள உறவு, இன்றும் விசேடமாக நினைவுகூரப்படுகிறது. தம்பிலுவில் அம்மன் கோயிலின் தோற்றம் தொடர்பான ஒரு கதையில் புறா இணைத்துச் சொல்லப்படுகிறது.  பெண்கள் விறகு பொறுக்க வந்தபோது அவர்களை அலைக்கழித்த ஒரு வினோதமான பொன்னிறப் புறா, “கண்ணகி!” என்று குனுகியதாகவும், அது மறைந்த இடத்தில், இங்குள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும்,...

மட்டக்களப்பின் தலைநகராகும் காரைதீவு!

படம்
வான்கூன்சின் அறிக்கையிலிருந்து..... இதென்ன புதுக்கதை ! எப்போது நிகழ்ந்தது இது ? யார் காரைதீவை மட்டக்களப்பின் தலைநகர் ஆக்கியது ? என்றெல்லாம் பதற்றம் கொள்ள வேண்டாம் . கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் . என்ன ஏதென்று போய் ஆறுதலாக விசாரிப்போம் . இலங்கை ஒல்லாந்தரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதி அது . அப்போது (1664 - 1675) இலங்கையின் இடச்சு ஆளுநராக பதவி வகித்தவர் , ரைக்லொவ் வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் (Rijcklof Volckertsz. van Goens). அவர் பதவியா என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு , 1675 இல் ஆளுநர் நாயகமாக   இடமாற்றம் பெற்றுச் சென்றார் . அப்போது அவர் எழுதிச் சென்ற இலங்கை பற்றிய அறிக்கையில் மட்டக்களப்பு பற்றிய   விரிவான சித்திரம் வருகின்றது . அதில் சில குறிப்புகள் வரலாற்று ரீதியாக முக்கியமானவை .      ரைக்லொவ் வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் “ மட்டக்களப்பில் , காலம் காலமாக , மூன்று திசாவைகள் அல்லது மூன்று பண்டாரங்கள் ஆண்டு வந்த மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன . நாங்கள் இன்று வசதிக்காக ஒரு பிரிவாக ஆண்டாலும் , அ...

“வியாளை அரசியின் மட்டக்களப்பு மருமகன்”

படம்
(கோயம்பராவின் குறிப்புகளிலிருந்து..) கதிர்காமம் நடந்து போகும் எல்லாருக்கும் “வியாளை” என்பது நன்கு அறிமுகமான பெயர். குமுக்கனாற்றுக்கும் கதிர்காமத்துக்கும் இடையில் பரந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி அது. சிங்களத்தில் அதை “யால” என்று சொல்லுவார்கள். கதிர்காம யாத்திரை செல்கின்ற பலர், வியாளையில் ‘கொள்ளி‘பொறுக்கவோ ‘கடன்‘ கழிக்கவோ அந்தப்பக்கம் இந்தப்பக்கம் செல்லும் போது, அங்கு கட்டிட இடிபாடுகளையும் சிதைந்த தொல்பொருள் எச்சங்களையும் காண்பது வழக்கம். ஏனென்றால் பழங்காலத்தில் மக்கள் செறிந்து வாழ்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்த இடம், வியாளை. வியாளையில் பாயும் மாணிக்க கங்கை சிங்கள வரலாற்று நூல்கள்  சொல்லும் உரோகண நாடு, தென்கிழக்கிலங்கையில் அமைந்திருந்ததாகவும், அதன் தலைநகர் மாகாமம் (இன்றைய திஸ்ஸமகாராமை– கிரிந்த பகுதி) என்றும் சொல்லுவார்கள். அந்த நாட்டின் வட எல்லை, இன்றைய அம்பாறை மாவட்டம்வரை விரிந்திருந்தது என்று கொள்வதற்கு பல சான்றுகள் உள்ளன. மாணிக்ககங்கைக்கு வடக்கே, மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்திருந்த “உன்னரசுகிரி” என்னும் இராசதானி பற்றி ‘மட்டக்களப்புப் பூர்வசரித...